யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

களியக்காவிளையில் 1 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது; மூவர் தலைமறைவு

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் உள்ள ஒரு கடையில் சேமியா மூட்டைகளுக்கு இடையே பதுக்கி வைத்திருந்த சுமார் 1 டன் அளவிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தக்கலை டிஎஸ்பி தலைமையிலான காவலர்கள் விய

News image
களியக்காவிளையில் பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்.
Updated On :8 அக்டோபர் 2020, 5:50 am

DIN

களியக்காவிளை:  கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் உள்ள ஒரு கடையில் சேமியா மூட்டைகளுக்கு இடையே பதுக்கி வைத்திருந்த சுமார் 1 டன் அளவிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தக்கலை டிஎஸ்பி தலைமையிலான காவலர்கள் வியாழக்கிழமை காலை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த காவலர்கள் தலைமறைவான மூவரை தேடி வருகின்றனர்.  

களியக்காவிளை சந்திப்பு அருகே ஆம்னி பேருந்து முன்பதிவு மையம் நடத்தி வருபவர் அதே பகுதியைச் சேர்ந்த அன்வர். இதையொட்டியே அவரது வீடு அமைந்துள்ளது. 

இந்த நிலையில் வீட்டின் மேல்மாடியில், கேரளத்துக்கு கடத்திச் செல்ல புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக தக்கலை சரக காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் பேரில் அவரது தலைமையில் வந்த காவவர்கள் குறிப்பிட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
 இதில் சேமியா பாக்கெட்டுகளுக்கு இடையே ஒரு டன் அளவிலான புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததும் அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. 

இதையடுத்து புதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்து களியக்காவிளை காவல்நிலையத்தில் வழக்குப் பதிந்து அன்வரை கைது செய்தனர். உடந்தையாக இருந்த செயல்பட்டு தப்பியோடிய மூவரை காவலர்கள் தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.