இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: அரசுப் பேருந்து ஓட்டுநர் பலி

ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 10:24 am

DIN


ஈரோடு: ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை மேற்கு தலவுமலை பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் ரமேஷ்(44). இவர் அரசுப் போக்குவரத்துக் கழக ஈரோடு கிளையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் சனிக்கிழமை இரவு பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

கஸ்பாபேட்டை வாய்க்கால் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பூந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி வந்த கார், ரமேஷ் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. அதன்பின்னும் அந்த  கார் நிற்காமல் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரமேஷை அப்பகுதி மக்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,  ரமேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  

இச்சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர். பலியான ரமேஷ்க்கு பேபி(40) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.