நாகை மாவட்டம் சீர்காழி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திர ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பத்திரம் பதிவு செய்ய வருபவரிடம் பத்திரப்பதிவு சிலர் லஞ்சம் பெறுவதாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களுக்கு புகார் வந்ததன் அடிப்படையில் புதன்கிழமை இரவு 6 மணி முதல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் ரமேஷ்குமார், அருள் பிரியா தலைமையில் 8 காவல்ரகள் திடீரென சீர்காழி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து நுழைவாயிலை பூட்டிவிட்டு யாரையும் உள்ளே செல்லவும், உள்ளே இருப்பவர்கள் வெளியேறவும் அனுமதி மறுத்து 5 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மேற்கொண்டனர்.