குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையைத் துவங்க வேண்டும்:  கொ.ம.தே.க. வேண்டுகோள்

அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையைத் துவங்க வேண்டும் என  கொ.ம.தே.க. வேண்டுகோள் விடுத்துள்ளது. 

News image
கொ.ம.தே.க., பொதுச் செயலாளர் ஈஸ்வரன்
Updated On :1 செப்டம்பர் 2020, 1:37 pm

DIN

அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையைத் துவங்க வேண்டும் என  கொ.ம.தே.க. வேண்டுகோள் விடுத்துள்ளது. 

கொ.ம.தே.க., பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஈரோட்டில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:

பல்வேறு தளர்வுடன், தமிழகத்தில் மாவட்டத்துக்குள் பஸ் இயக்கம் துவங்கி உள்ளது. பிற மாவட்டத்துக்கு பஸ் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. அடித்தட்டு மக்கள், ஒரு மாவட்ட எல்லைக்கு பயணித்து, வெகுதுாரம் நடந்து அடுத்த மாவட்டத்துக்கு செல்ல இயலாது. ஒரு மாவட்டத்துக்குள் பயணித்தால் கரோனா பரவாது என்றும், பிற மாவட்டம் சென்றால் பரவும் என்ற அச்சத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

இதனால், தொழிற்சாலை பணி, விவசாய பணி, கட்டுமானம் என எந்த பணிக்கும் செல்ல முடியவில்லை. பல ஆயிரம் பணிகள், ஆலைகள், லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். எனவே, அடித்தட்டு மக்களின் நிலையை புரிந்து, அனைத்து மாவட்டங்களுக்கும் பஸ் இயக்கத்தை துவங்க வேண்டும்.

ஊரடங்கால் வேலை, வருவாயை மக்கள் இழந்த நிலையில், மின்வாரியத்துக்கு கூடுதல் வைப்புத்தொகை கட்ட வேண்டும் என நிர்பந்திப்பது நியாயமல்ல. தொழிற்சாலைகள் ஐந்து மாதத்துக்கு மேல் செயல்படாமல், தற்போதுதான், முழு அளவில் செயல்பட துவங்குகிறது.

இந்நிலையில், பல ஆயிரம் ரூபாயை வைப்பு நிதியாக வைக்க வலியுறுத்தினால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். அதேபோல, மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பவில்லை. போக்குவரத்து முழுமையாக துவங்கவில்லை. தொழிற்சாலை இயங்கவில்லை.

எந்த வியாபாரமும் நடக்காத நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி கட்டணத்தை உயர்த்தி இருப்பது கொடூரமான செயலாகும். அனைத்து வங்கி கடன் தவணை வட்டியை செலுத்த மேலும் ஆறு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் அல்லது மக்கள் விபரீதமான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என தெரிவித்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.