மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணல் கடத்தல்: நெல்லை மாவட்ட நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்ற கிளை சரமாரிக் கேள்வி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மணல் கொள்ளை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

News image
மணல் கடத்தல்:மாவட்ட நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்ற கிளை சரமாரிக் கேள்வி
Updated On :24 செப்டம்பர் 2020, 10:37 am

DIN

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மணல் கொள்ளை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி சிவகங்கரன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பல கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் அளவுக்கு மணல் கொள்ளை நடக்கும் வரை மாவட்ட நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடமையைச் செய்யத் தவறிய கனிம வளம், வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும், குண்டர் சட்டத்தில் கைது செய்யாதது ஏன் என்றும், இந்த கேள்விகளுக்கு நெல்லை ஆட்சியர், நெல்லை காவல்துறை எஸ்.பி. ஆகியோர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.