யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அனைவரும் ஒற்றுமையாக தேர்தலை சந்திப்போம்: அமைச்சர் சி.வி.சண்முகம்

எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் என அனைவரும் ஒற்றுமையாக தேர்தலை சந்திப்போம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

News image
அனைவரும் ஒற்றுமையாக தேர்தலை சந்திப்போம்: அமைச்சர் சி.வி.சண்முகம்
Updated On :30 செப்டம்பர் 2020, 9:05 am

DIN

எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் என அனைவரும் ஒற்றுமையாக தேர்தலை சந்திப்போம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பில், 865 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

தமிழகத்தில்  மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கமும். ஆதரவும். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் என அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் களத்தை சந்திப்போம்.

மு.க. ஸ்டாலின் பச்சை கலர் துண்டு அணிந்தால் விவசாயியாக மாறி விட முடியாது. இன்று போய் சேற்றில் இறங்கி விட்டு விவசாயி என்றால் ஏற்க முடியாது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து இன்றுவரை விவசாயம் செய்து வருகிறார்.

விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கத்தான் திமுகவினருக்கு தெரியும். அதிமுகவினரை ஊழல் வழக்குகளில் இருந்து பாஜக காப்பாற்றுவதாக கூறும் ஸ்டாலின், அவர்கள் குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள 2ஜி வழக்கு விசாரணை, 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இரண்டு லட்சம் கோடி ரூபாய் உலக மகா ஊழல்  விசாரணை குறித்து, ஸ்டாலின் என்ன சொல்லப்போகிறார் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.