நீட் தேர்வில் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்றுவதை எதிர்த்து வழக்கு
நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சென்னை: நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் அரவிந்த் ராஜ் தாக்கல் செய்த மனுவில், நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தபட்டு வருகிறது. இந்த தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகள் நகைகளை அணிய கூடாது , பர்ஸ் வைத்திருக்கக்கூடாது மற்றும் கைக்கடிகாரம் அணியக் கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கட்டுபாடுகளால், ஆண்டுதோறும் மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். திருமணமான விண்ணப்பதாரர்கள் புனிதமாகக் கருதும் தாலி, மெட்டி, காதணி, மூக்குத்தி போன்றவைகளை அகற்ற நிர்பந்திக்கபடுகின்றனர். தேர்வு அறைகளில் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், நகைகளை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதமானது.
இந்த நிபந்தனைகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். நகைகளை அகற்ற, மாணவிகளை நிர்பந்திக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...