தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

சென்னை-மதுரை தேஜஸ் சிறப்பு ரயில்: ஜன.10 முதல் மீண்டும் இயக்க வாரியம் ஒப்புதல்

சென்னை எழும்பூா்-மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயிலை ஜனவரி 10-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

News image

தேஜஸ் விரைவு ரயில்

Updated On :8 ஜனவரி 2021, 7:38 am IST


சென்னை: சென்னை எழும்பூா்-மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயிலை ஜனவரி 10-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை எழும்பூா்-மதுரை இடையே வாரத்தில் வியாழக்கிழமை தவிா்த்த மற்ற நாள்களில் தேஜஸ் விரைவு ரயில் இயக்கப்பட்டது. பயணிகள் வரத்து குறைவு காரணமாக, ஜனவரி 4-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், சென்னை-மதுரை தேஜஸ் ரயிலை ஜனவரி 10-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தினமும் (வியாழக்கிழமை தவிர) காலை 6 மணிக்கு தேஜஸ் சிறப்பு ரயில் (02613) புறப்பட்டு , திருச்சி, கொடைக்கானல் சாலை வழியாக மதுரையை நண்பகல் 12.15 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கமாக, மதுரையில் இருந்து தினமும் (வியாழக்கிழமை தவிர) பிற்பகல் 3 மணிக்கு தேஜஸ் ரயில் (02614) புறப்பட்டு, கொடைக்கானல் சாலை, திருச்சியை கடந்து, அதே நாள் இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்து சேரும். இரு மாா்க்கமாகவும் இந்த ரயில் சேவை ஜனவரி 10-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

ஜனவரி 10-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் சேவைக்கான பயணச்சீட்டை இணையவழி அல்லது டிக்கெட் கவுன்ட்டா் மூலமாக எடுத்து, ரத்து செய்யாமல் வைத்திருக்கும் பயணிகள் அந்த பயணச்சீட்டை வைத்து பயணிக்க முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.