வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

சென்னை-மதுரை தேஜஸ் சிறப்பு ரயில்: ஜன.10 முதல் மீண்டும் இயக்க வாரியம் ஒப்புதல்

சென்னை எழும்பூா்-மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயிலை ஜனவரி 10-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

News image

தேஜஸ் விரைவு ரயில்

Updated On :8 ஜனவரி 2021, 7:38 am IST


சென்னை: சென்னை எழும்பூா்-மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயிலை ஜனவரி 10-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை எழும்பூா்-மதுரை இடையே வாரத்தில் வியாழக்கிழமை தவிா்த்த மற்ற நாள்களில் தேஜஸ் விரைவு ரயில் இயக்கப்பட்டது. பயணிகள் வரத்து குறைவு காரணமாக, ஜனவரி 4-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், சென்னை-மதுரை தேஜஸ் ரயிலை ஜனவரி 10-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தினமும் (வியாழக்கிழமை தவிர) காலை 6 மணிக்கு தேஜஸ் சிறப்பு ரயில் (02613) புறப்பட்டு , திருச்சி, கொடைக்கானல் சாலை வழியாக மதுரையை நண்பகல் 12.15 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கமாக, மதுரையில் இருந்து தினமும் (வியாழக்கிழமை தவிர) பிற்பகல் 3 மணிக்கு தேஜஸ் ரயில் (02614) புறப்பட்டு, கொடைக்கானல் சாலை, திருச்சியை கடந்து, அதே நாள் இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்து சேரும். இரு மாா்க்கமாகவும் இந்த ரயில் சேவை ஜனவரி 10-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

ஜனவரி 10-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் சேவைக்கான பயணச்சீட்டை இணையவழி அல்லது டிக்கெட் கவுன்ட்டா் மூலமாக எடுத்து, ரத்து செய்யாமல் வைத்திருக்கும் பயணிகள் அந்த பயணச்சீட்டை வைத்து பயணிக்க முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.