குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாக்குக்கு பணம் விநியோகம்: ரூ.17 ஆயிரம், திமுக பிரசுரங்களுடன் 2 பேர் கைது

அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக ரூ.17 ஆயிரம், திமுக துண்டுபிரசுரங்களுடன் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

News image
Updated On :1 ஏப்ரல் 2021, 7:17 am

DIN

வேலூர்: அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக ரூ.17 ஆயிரம், திமுக துண்டுபிரசுரங்களுடன் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்கள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதைத் தடுக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுவினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Story image

இந்நிலையில், அணைக்கட்டு தொகுதிக்கு உள்பட்ட அரியூர் அருகே தெல்லூர் கிராமத்தில் புதன்கிழமை இரவு வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருவதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றிக்கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் வாக்காளர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்த நோட்டு, ரூ.17 ஆயிரம் ரொக்கம், திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமாருக்கு வாக்குகள் கோரும் துண்டுபிரசுரங்கள் ஆகியவை இருந்தது தெரியவந்தது. வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Story image

இதைத்தொடர்ந்து, இருவரையும் போலீஸார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த ரூ.17 ஆயிரம், திமுக துண்டுபிரசுரங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.