கரோனா வேகமாக பரவி வருவதால் அடுத்த 2 வாரங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தமிழகத்தில் முழுமுடக்கத்திற்கான சூழல் தற்போது இல்லை. அடுத்த 2 வாரங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவை.
தமிழக மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர்கள் தேவையான அளவு கையிருப்பு உள்ளது. முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து 2.39 லட்சம் பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.