அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருவிக நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டையில் தீவிரமடையும் கரோனா பாதிப்பு

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை சனிக்கிழமை காலை நிலவரப்படி 31,170 ஆக அதிகரித்துள்ளது. 

News image
திருவிக நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டையில் தீவிரமடையும் கரோனா பாதிப்பு
Updated On :24 ஏப்ரல் 2021, 5:58 am

DIN

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை சனிக்கிழமை காலை நிலவரப்படி 31,170 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் திருவிக நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை ஆகிய மூன்று மண்டலங்களில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்த மூன்று மண்டலங்களிலும் தற்போது சிகிச்சையிலிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 3,01,541 ஆக அதிகரித்துள்ளது. இதில், 2,65,859 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சென்னையில் மட்டும் கரோனா பாதித்து வீடு மற்றும் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,170 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனாவுக்கு 4,512 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அண்ணா நகரில் அதிகபட்சமாக 3,266 பேரும், தேனாம்பேட்டையில் 3,251 பேரும், திருவிக நகரில் 3,012 பேரும், ராயபுரத்தில் 2,602 பேரும், கோடம்பாக்கத்தில் 2,598 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Story image

கடந்த மாா்ச் 1-ஆம் தேதி 171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து ஏப்ரல் 10-ஆம் தேதி 2000-ஐ கடந்தது. தற்போது அந்த எண்ணிக்கை மேலும் உயா்ந்து கடந்த ஓராண்டில் அதிகபட்சமாக ஏப்.18-ஆம் தேதியன்று, 3,304 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தற்போது 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதன்படி சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 3842 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகரித்து வரும் நோய்ப் பரவல் சென்னை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.