அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்னையில் அதிகரிக்கும் கரோனா: மண்டலவாரியாக பாதிப்பு விவரம்

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,535 ஆக அதிகரித்துள்ளது. 

News image
சென்னையில் கரோனா பாதிப்பு
Updated On :26 ஏப்ரல் 2021, 7:36 am

DIN

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,535 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 3,09,899 ஆகவும் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,535 ஆகவும்  அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை கரோனாவுக்கு 4,567 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பான 3,09,899 பேரில் 2,73,797 பேர் குணமடைந்துள்ளனர். 

நேற்று(ஏப்ரல் 25) மட்டும் 20,069 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதில் அண்ணா நகர், தேனாம்பேட்டையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தேனாம்பேட்டையில் அதிகபட்சமாக 3,398 பேரும் அண்ணா நகரில் 3,184 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 மண்டலங்களில் பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

திருவிக நகர் - 2,843, கோடம்பாக்கம் -2,783, ராயபுரம் -2,293, அம்பத்தூர்-2,606 தண்டையார்பேட்டை-2,151, அடையாறு-2,355 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.