சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டும்: கிருஷ்ணசாமி

வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டும்: கிருஷ்ணசாமி

Published On :

வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் ஒரு சில கட்சியினரை மட்டுமே அழைத்து கூட்டம் நடத்தி இருப்பது ஏற்புடையது அல்ல. அந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை.

கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போவதால் இந்த அரசுகள் முழு ஊரடங்கிற்குத் தள்ளிக்கொண்டு செல்கின்றனர். அதுமட்டுமின்றி தற்போது மருந்துகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதற்கு ஆளுநர் அவர்களே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி மாவட்டங்கள் அளவில் ஊராட்சிகள் அளவில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இன்றைய சூழலில் இரும்பு தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் ஆக்சிஜன்களை உற்பத்தி செய்ய முடியும். தற்பொழுது முகக் கவசங்கள் அணியாதவர்களுக்கு அபராதங்கள் விதிப்பதை விட்டுவிட்டு அவர்களுக்கு முகக் கவசங்கள் தந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தடுப்பூசி தயாரிப்பதற்கு இந்தியாவில் இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது ஏனென்று தெரியவில்லை. தடுப்பூசி தயாரிக்கக் கூடிய வசதிகள் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும். தடுப்பூசியை அதிகபட்சமாக ரூ.250க்கு கொடுத்தால் அனைவரும் போட்டுக் கொள்வார்கள்.

தற்பொழுது வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் மே 2ஆம் தேதியன்று நடைபெற இருக்கக்கூடிய தேர்தல் வாக்கு எண்ணிக்கையைத் தள்ளி வைக்கலாம். அதற்கான நடவடிக்கைகளை அரசும் தேர்தல் ஆணையமும் மேற்கொள்ள வேண்டும். மேலும் தன்னிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் மூன்றே மாதங்களில் வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க முடியும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.