அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்னையில் 6 மண்டலங்களில் கரோனா பாதிப்பு தீவிரம்

சென்னையில் திருவிக நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய ஆறு மண்டலங்களிலும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

News image
சென்னையில் 6 மண்டலங்களில் கரோனா பாதிப்பு தீவிரம்
Updated On :28 ஏப்ரல் 2021, 5:31 am

DIN

சென்னையில் திருவிக நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய ஆறு மண்டலங்களிலும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி புள்ளி விவரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,18,614 ஆக உள்ளது. இவர்களில் 2,82,849 பேர் குணமடைந்துள்ளனர். 4,629 பேர் பலியாகிவிட்டனர்.

தற்போது கரோனா பாதித்து மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 31,136 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 3,210 பேரும், அண்ணாநகரில் 3,165 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

இதற்கடுத்த இடங்களில் கோடம்பாக்கத்தில் 2,935 பேரும், அம்பத்தூரில் 2,832 பேரும், திருவிகநகரில் 2,599 பேரும், அடையாறில் 2,503 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்தமுள்ள 31 ஆயிரம் நோயாளிகளில், இந்த ஆறு மண்டலங்களில் மட்டும் சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

மண்டலவாரியாக நிலவரம்..

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.