இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தமிழக விவசாயிகளுக்காகத்தான் ஆக. 5ல் உண்ணாவிரதப் போராட்டம்: அண்ணாமலை

தமிழக விவசாயிகளுக்காகவும் பொதுமக்களுக்காகவும் தான் வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி மேகதாது அணைக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்தப்படவிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

News image
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
Updated On :3 ஆகஸ்ட் 2021, 11:44 am

DIN

தமிழக விவசாயிகளுக்காகவும் பொதுமக்களுக்காகவும் தான் வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி மேகதாது அணைக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்தப்படவிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து அவர் பிறந்த இடமான ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள திருவுருவ சிலைக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, 1967க்குப் பின் வந்த தமிழக அரசு பாடப்புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் குறித்த வரலாறு இல்லை. நிறைய வரலாறு புறக்கணிப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

கீழடி ஆய்வை வரவேற்பதாக தெரிவித்த அண்ணாமலை, கீழடி ஒருவருக்கும் சொந்தமில்லை என்றார்.

நீட் தேர்வை பொருத்தவரை சமூகநீதியை தாண்டி வெற்றி பெற்றுள்ளது என்றும் , நீட் யாருக்கும் எதிரானது அல்ல என்றும், மா.சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுதி முதலில் பாஸ் செய்யட்டும் என்றார்.

பாஜக உண்ணாவிரதம் கர்நாடகத்திலுள்ள அனைத்து எதிர்கட்சிகளுக்கும் ஆளுங்கட்சிக்கும் எதிரானது. தமிழக விவசாயிகளுக்காக பொதுமக்களுக்காகத்தான் உண்ணாவிரதம் என்று கூறிய அவர், தமிழக மக்களையும் , தமிழர் உணர்வையும் பிரதமர் மோடி மதித்து வருவதாகவும் தமிழக பாஜக ஒவ்வொரு வீடு வீடாக சென்று மோடி செய்த திட்டங்கள் குறித்து விளக்கும் என்றார். தேர்தல் அறிக்கையில் சொன்னதை முதலில் திமுக செய்யட்டும் என்றும் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.