முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஆடி அமாவாசை: சுருளி அருவிக்கு பக்தர்கள் செல்லத் தடை; ஆற்றின் கரையோரங்களில் கூட்டம்

தேனி மாவட்டம் சுருளி அருவியில் கரோனா தொற்றை முன்னிட்டு பக்தர்கள் செல்ல தடை விதித்ததால் முல்லைப் பெரியாற்றின் கரையோரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது.

News image
முல்லைப் பெரியாற்றின் கரையோரங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த மக்கள்.
Updated On :8 ஆகஸ்ட் 2021, 7:29 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில் கரோனா தொற்றை முன்னிட்டு பக்தர்கள் செல்ல தடை விதித்ததால் முல்லைப் பெரியாற்றின் கரையோரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். தமிழக அரசு மக்கள் கூடும் இடங்களில் தற்பொழுது தடை விதித்துள்ளது. இந்த தடை சுருளி அருவிக்கும் பொருந்தும்.

இதனால் ஞாயிற்றுக்கிழமை சுருளி அருவிக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யச் சென்ற பொதுமக்களை ராயப்பன்பட்டி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் சுருளி அருவிக்கு சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பின்னர் சுருளிப்பட்டி அருவி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் கரையில் முன்னோர்களை நினைத்து வழிபாடுகள் நடத்தி, அன்னதானம் வழங்கினர். முல்லைப் பெரியாற்றின் கரையோரங்களிலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.