இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தம்மம்பட்டி: ஏ.டி.எம். இயந்திரத்தில் திருட முயன்றவர் காவல்நிலையத்திலிருந்து தப்பியோட்டம்

தம்மம்பட்டி அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தைத் திருட முயற்சி நடந்துள்ளது. தப்பியோடிய வடமாநில இளைஞரை, சி.சி.டி.வி. காட்சியின் பதிவைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News image
தம்மம்பட்டி அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி!
Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:27 am

DIN

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தைத் திருட முயற்சி நடந்துள்ளது. தப்பியோடிய வடமாநில இளைஞரை, சி.சி.டி.வி. காட்சியின் பதிவைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி பஜனைமட தெரு பேருந்து நிறுத்தத்தில் அருகருகே பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. 

இதனிடையே நேற்று நள்ளிரவு கனரா வங்கியின் ஏ.டி.எம்.மிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஏ.டி.எம்.மின் முன்பக்க கண்ணாடி மற்றும் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்கும் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஏ.டி.எம். இயந்திரத்தை சேதப்படுத்திய, வட மாநிலத்தைச் சேர்ந்த மர்ம நபரை வளைத்துப் பிடித்த பொதுமக்கள், தம்மம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் வட மாநில நபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்காக நள்ளிரவில் காவல்நிலையத்தில் அமர வைத்துள்ளனர். அப்போது காவலர்கள் கண் இமைக்கும் நேரத்தில் வட மாநிலத்தை சேர்ந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். 

இதனையடுத்து உடைக்கப்பட்ட ஏ.டி.எம். இயந்திரத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தப்பியோடிய மர்ம நபரை காவலர்கள் தேடி வருகின்றனர். இதனால் ஏ.டி.எம். மில் இருந்த பணம் திருட்டுப் போகாமல் தப்பியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.