முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

News image
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
Updated On :4 டிசம்பர் 2021, 7:22 am

DIN

கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தேனி மாவட்டத்தில் தென்மேற்குத் தொடர்ச்சி மலையில் சுருளி அருவி அமைந்துள்ளது. தொடர் மழை காரணமாக நீர்வரத்துப் பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை நீர்ப்பிடிப்பு காட்டு ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கரோனா தொற்று பரவல் காரணமாக சுருளி அருவி பகுதியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கடந்த 2 ஆண்டுகளாக செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து புலிகள் காப்பக அலுவலர் ஒருவர் கூறும்போது, சுருளி அருவியில் தொடர் மழை காரணமாக கடந்த 3 நாட்களாக  வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது.

சுருளியாறு செல்லும் பகுதிகளிலும் காட்டு ஓடைகளில் வரும் தண்ணீரும் சேர்ந்து அதிகமாக நீர் வரத்து ஏற்பட்டு முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது என்று தெரிவித்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.