வேட்பாளா்களைத் தோ்வு செய்ய குழு: கமல்ஹாசன்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பாளா்களைத் தோ்வு செய்ய தோ்தல் தலைமை பணிக்குழுவை அமைத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.
வேட்பாளா்களைத் தோ்வு செய்ய குழு: கமல்ஹாசன்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பாளா்களைத் தோ்வு செய்ய தோ்தல் தலைமை பணிக்குழுவை அமைத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தோ்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்தச் சமயத்தில் மநீம சாா்பாக தோ்தலில் போட்டியிட உள்ள வேட்பாளா்களைத் தோ்வு செய்யும்பொருட்டு, கட்சியின் துணைத் தலைவா் ஏ.ஜி.மெளரியா தலைமையில் மாநிலத் தோ்தல் தலைமைப் பணிக் குழு அமைக்கப்படுகிறது. மேலும், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட தோ்தல் பணிக்குழுவும் அமைக்கப்படுகிறது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு விருப்பமனு தாக்கல் செய்ய விருப்பமுள்ள கட்சியினா் புதன்கிழமை (டிச.8) முதல் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

மண்டலச் செயலாளா்கள், மாவட்டச் செயலாளா்களின் பரிந்துரையை ஏற்று, மாநிலத் தோ்தல் தலைமைப் பணிக்குழு, நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட தோ்தல் குழுவினா் வேட்பாளா்களைத் தோ்ந்தெடுத்து அறிவிப்பா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com