இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜன.3 முதல் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விநியோகம்

ஜனவரி 3ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 4:00 pm

DIN

ஜனவரி 3ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 20 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களான 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 பேருக்கு ரூ.1,088 கோடி செலவில் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி, திராட்சை தலா 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு அரை கிலோ, நெய், மஞ்சள்தூள், மிளகாய், மல்லித் தூள், கடுகு, சீரகம் தலா 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், உளுத்தம் பருப்பு அரை கிலோ, ரவை, கோதுமை மாவு தலா ஒரு கிலோ, உப்பு அரை கிலோ ஆகியன ஒரு துணிப் பையில் வைத்து வழங்கப்பட உள்ளன. 

கரும்பும் தனியாக வழங்கப்பட உள்ளது. இதற்காக ஒரு கரும்புக்கு ரூ.33 வீதம் ரூ.71 கோடியே 10 லட்சம் செலவிடப்பட உள்ளது. இந்த நிலையில் ஜனவரி 3ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திட்டத்தை ஒருங்ணிந்து திறம்பட செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.