கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தமிழகத்தில் புதிதாக 604 பேருக்கு கரோனா; 8 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 604 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 8 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் 695 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

News image
தமிழகத்தில் புதிதாக 604 பேருக்கு கரோனா; 8 பேர் பலி
Updated On :22 டிசம்பர் 2021, 1:50 pm

DIN


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 604 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 8 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் 695 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

நேற்று 602 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று (டிச.22) தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் 1,01,713 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 604 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,41,617-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,699-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 695 பேர் குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,97,939-ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.