இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற கைரேகை கட்டாயமில்லை: உணவுத் துறை அமைச்சர்

பொங்கல் பரிசுப்பொருள்களைப் பெற கைரேகை கட்டாயமில்லை என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :29 டிசம்பர் 2021, 2:53 am

DIN

பொங்கல் பரிசுப்பொருள்களைப் பெற கைரேகை கட்டாயமில்லை என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகததை அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் பேசிய அவர், பொங்கல் பண்டிகைக்கான 21 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஜனவரி 3 அல்லது 4-ஆம் தேதி முதல் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். 

ஜன 2-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுப் பொருள்கள் அந்தந்த நியாயவிலைக் கடைகளுக்கு சென்று சேர்ந்துவிடும் எனக் குறிப்பிட்ட அவர், 

பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற கைரேகை வைக்க வேண்டிய கட்டாயமில்லை. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன் அட்டையை காண்பித்தாலே போதுமானது என்று கூறினார். 

பொங்கல் மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை சிறப்பாக விநியோகித்திட எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கடந்த 27-ஆம் தேதி கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.