மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரியில் வீடு புகுந்து சமையல் மாஸ்டர் வெட்டிக் கொலை

கிருஷ்ணகிரியில் மதுரையைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :10 பிப்ரவரி 2021, 3:52 am

DIN


கிருஷ்ணகிரியில் மதுரையைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெயமணி, நண்பர் தேவபாண்டியன் இருவரும் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் முதல் தெருவில் வாடகை வீட்டில் தங்கி சமையல் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ஜெயமணி வீட்டில் இருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ஜெயமணி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். 

அவரது நண்பர் தேவபாண்டியன் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்ட காவலர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஜெயமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.