விழுப்புரத்தில் கூடா நட்பில் ஒருவர் கொலை
விழுப்புரத்தில் கூடா நட்பில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.


விழுப்புரத்தில் கூடா நட்பில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
விழுப்புரம் நகராட்சி எதிரே உள்ள ராஜகோபால் தெருவில் வசித்து வரும் சேகர் மனைவி சித்ரா (39). சேகர் இரண்டாண்டுக்கு முன் இறந்து விட்டார்.
இதனால் சித்ராவுக்கும், விழுப்புரம் காந்தி சிலை அருகில் உள்ள ஓட்டலில் பணிபுரியும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த பாலமுருகன் (26) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு, அவரை அண்மையில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், சித்ராவின் மருமகன் சோனு சர்மாவுக்கும், பாலமுருகனுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் சோனு தன் கையில் வைத்திருந்த கத்தியால் பாலமுருகனை குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
விழுப்புரம் நகர போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பினர்.
குற்றவாளியை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...