யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடியில் இளைஞர் குத்திக்கொலை

தூத்துக்குடி கதிர்வேல் நகரில் நண்பர்களே சேர்ந்து நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :26 பிப்ரவரி 2021, 5:07 am

DIN


தூத்துக்குடி கதிர்வேல் நகரில் நண்பர்களே சேர்ந்து நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் மாரிமுத்து (36). கூலித் தொழிலாளி. பாலவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பச்சைபெருமாள் மகன் லட்சுமணன் (41), அண்ணா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மதுரைமுத்து (24). இவர்கள் மூவரும் நண்பர்கள். லட்சுமணனும் மதுரைமுத்துவும் மாரிமுத்துவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்களாம்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மாரிமுத்து வெளியூர் சென்றிருந்தபோது, அவரது வீட்டில் பொருட்கள் திருடுபோனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது அவரது நண்பர்கள் தான் அங்குவந்து சென்றதாக தெரிவித்துள்ளனர். இதனால் நண்பர்கள் மீது சந்தேகம் அடைந்த அவர் லட்சுமணனையும், மதுரைமுத்துவையும் "எனது வீட்டில் ஏன் திருடினீர்கள்?" என்று கேட்டு கண்டித்தாராம். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் லட்சுமணன் மற்றும் மதுரை முத்து அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளனர். நேற்று இரவு மாரிமுத்துவை மது குடிக்க அழைத்துச் சென்றுள்ளனர். நள்ளிரவு 2 மணியளவில் நல்ல போதையில் இருந்த மாரிமுத்துவை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். 

இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயகுமார், டிஎஸ்பி பொன்னரசு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.