ஈரோடு ஆஞ்சனேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் உள்ள மகாவீர ஆஞ்சனேயர் கோயில் உள்பட பல்வேறு ஆஞ்சனேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 
ஈரோடு ஆஞ்சனேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா
Updated on
2 min read

ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் உள்ள மகாவீர ஆஞ்சனேயர் கோயில் உள்பட பல்வேறு ஆஞ்சனேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் வடமாலை சாற்றப்பட்டு இருக்கும். இதேபோல் பக்தர்களுக்கு லட்டு அன்னதானம் போன்றவை வழங்கப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக இதற்கு அனுமதி இல்லை. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதைடுத்து இன்று அதிகாலை ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் 8 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. முகக்கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் தேங்காய் பூஜை பொருள்கள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டது. சமூக இடைவெளியைக்  கடைப்பிடிக்கும் வகையில் பேரிகார்டு அமைக்கப்பட்டு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள் , உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளின் படி, நடப்பாண்டு சுவாமி திருவீதி உலா, தேர்தல் இழுத்தல், வியாபார கடைகள் அமைப்பதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் அனுமதிக்கவில்லை. இதனால், அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமரை வழிபட்டுச் சென்றனர். பக்தர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை ஆய்வு செய்யப்பட்டு, கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்த பின்னரே கோயிலுக்குள் அனுமதித்தனர்.

இதைப்போல் ஈரோடு மாநகர் பகுதியில் கோட்டை பெருமாள் கோவில் உள்ள ஆஞ்சனேயர், கள்ளுகடைமேடு ராமபக்த ஆஞ்சனேயர் கோவில், ரெயில்வே காலனி சித்தி விநாயகர் கோவில் உள்ள ஆஞ்சநேயர், காரைவாய்க்கால் ராத்திரி சத்திரம் ஆஞ்சநேயர் கோவில், கருங்கல்பாளையம் விஸ்வரூப சீரடி சாய்பாபா கோவிலில் உள்ள பக்த ஆஞ்சனேயர் கோவில், மாநகராட்சி வளாகத்தில் உள்ள ஆஞ்சனேயர் உள்பட கோவில்களில் அனுமன் ஜெயந்தியையொட்டி பொதுமக்கள் திரளாகத் தரிசனம் செய்தனர். இதைப்போல் கோபி அந்தியூர் பவானி பெருந்துறை சத்தியமங்கலம் கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆஞ்சனேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி ஓட்டி சிறப்பு ஆராதனை நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com