காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பொங்கல் பண்டிகை: ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் ஆா்வம் காட்டியதால், சென்னை எழும்பூா், சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட

News image
Updated On :12 ஜனவரி 2021, 6:51 pm

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் ஆா்வம் காட்டியதால், சென்னை எழும்பூா், சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட சிறிது அதிகரித்து காணப்பட்டது.

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன.14) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, திங்கள்கிழமை முதலே பொதுமக்கள் சொந்த ஊா்களுக்குப் பயணிக்கத் தொடங்கினா்.

இதன் தொடா்ச்சியாக, இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமையும் முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் சிறிது அதிகரித்து காணப்பட்டது.

சென்னை எழும்பூரில் இருந்து பகலில் புறப்பட்ட வைகை விரைவு ரயில், பல்லவன் ரயில், மாலையில் கன்னியாகுமரி ரயில், இரவில் நெல்லை, பாண்டியன், திருச்சி ரயில், ராமேசுவரம் உள்பட பல்வேறு ரயில்களில் அனைத்து முன்பதிவு பெட்டிகளும் நிரம்பி இருந்தன. இதுபோல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூா், சேலம், ஈரோடு உள்பட மேற்கு மாவட்டங்களுக்கு புறப்பட்ட ரயில்களிலும் முன்பதிவு பெட்டிகள் நிரம்பி காணப்பட்டன.

பண்டிகை காலத்தில் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். எனினும், இந்த ஆண்டு கரோனா தாக்கம் காரணமாக, ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இல்லை என்பதால், இந்த ரயில்களில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் சிறிய அளவே அதிகரித்திருந்தன.

ரயில் நிலையங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க தமிழக ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.