மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

கோவை காருண்யா பல்கலை.யில் வருமான வரித்துறை சோதனை

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் வருமான வரித்துறை டி.எஸ்.பி. தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுமார் 5 மணி நேரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

News image

கோவை காருண்யா பல்கலை.யில் வருமான வரித்துறை சோதனை

Updated On :20 ஜனவரி 2021, 1:15 pm IST

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் வருமான வரித்துறை டி.எஸ்.பி. தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுமார் 5 மணி நேரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகாரை அடுத்து சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் காருண்யா நிறுவனத்திற்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

Story image

கோவையில் காருண்யா பல்கலைக்கழகத்தில் வருமானவரித்துறை டி.எஸ்.பி. தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Story image

பல்கலைக்கழக வளாகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் முழுமையான சோதனைக்கு பின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. மேலும் செல்போன்களை எடுத்துச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இந்த வருமான வரித்துறை சோதனையானது நடந்து வருகிறது. 

Story image

தொடர் சோதனை நடந்து வரும் நிலையில் அங்கு காவல்துறை பாதுகாப்பு போடுவதற்கான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.