அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நிவாரண தொகை வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம்

திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

News image
நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
Updated On :20 ஜனவரி 2021, 8:09 am

DIN


திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

காலம் தவறி பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாராகி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்கக் கோரியும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு முழு பாதிப்பு என அறிவித்து அறுவடை ஆய்வு செய்வதை கைவிட்டு 100 சதவீத இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மேலும் விவசாயம் பாதித்த காரணத்தினால் வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பிடாகை கடைத்தெரு பகுதியில்  அக்கட்சியின் ஒன்றியச் செயலாளரும், கீழையூர் ஒன்றிய கவுன்சிலருமான டி. செல்வம் தலைமையில் அழுகிய நெற்பயிர்களை கையில் ஏந்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அக்கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் அ.நாகராஜ், விவசாய ஒன்றிய தலைவர் ஏ.செல்லையன்,ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்களான டி.பாலாஜி,பி.எஸ்.டி. பரமசிவம், ஏ.இராமலிங்கம்,ஏஐடியுசி மாவட்ட தலைவர் எஸ்.சிவதாஸ்,  விவசாய தொழில் சங்க ஒன்றிய செயலாளர வி. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 
போராட்டத்தில் ஈடுபட்ட 30 ஆண்கள் மற்றும் 15 பெண்கள் என 45  பேரை கீழையூர்  போலீசார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.