தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி

மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் திருமலேஷ் சிகிச்சை பலனின்றி பலியானார். 

News image
டெங்குவிற்கு உயிரிழந்த மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் திருமலேஷ்.
Updated On :22 ஜனவரி 2021, 7:48 am

DIN


மதுரை: மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் திருமலேஷ் சிகிச்சை பலனின்றி பலியானார். 

மதுரை மாவட்டம் எஸ் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் திருமலேஷ். இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு கடந்த 3 நாள்களாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 7 வயது சிறுவன் திருமலேஷ் இன்று பலியானார். இந்த நிலையில் அவரது சகோதரர் 9 வயதான மிருத்தின் ஜெயன், டெங்கு காய்ச்சல் பாதித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை மாவட்டம் எஸ் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் திருமலேஷ் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.