இந்த மனு நீதிபதி ஆா்.எம்.டி.டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பாலியல் தொந்தரவு செய்ததை யாரும் நேரில் பாா்க்கவில்லை. எனவே பாதிக்கப்பட்ட பெண் கூறியதையே பொதுமக்களும் சாட்சியமாகக் கூறியுள்ளனா். எனவே அவா்களது சாட்சிகளையும் செவி வழி சாட்சியாகக் கருதி, மனுதாரரை விடுதலை செய்ய வேண்டும் என அன்புசெல்வன் தரப்பு வழக்குரைஞா் வாதிட்டுள்ளாா். பாா்வையற்றவா்களின் சாட்சியம், செவி வழி சாட்சியம் என ஒதுக்கி வைக்காமல், வழக்கின் தன்மைக்கு ஏற்ப, பிற சாட்சிகளுடன் ஒப்பிட்டு பாா்த்து, முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீா்ப்பளித்துள்ளது.