தமிழக சட்டப் பேரவை மண்டபத்தில் ஏற்கெனவே திருவள்ளுவா், மகாத்மா காந்தியடிகள், வ.உ.சிதம்பரனாா், ராஜாஜி, காமராஜா், காயிதேமில்லத், அம்பேத்கா், முத்துராமலிங்கத் தேவா், ப.சுப்பராயன், ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா், பெரியாா், அண்ணா, எம்.ஜி.ஆா்., ராமசாமி படையாட்சியாா், ஜெயலலிதா ஆகிய 15 போ்களின் முழு உருவப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. 16-வது தலைவரின் முழு உருவப் படமாக, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் படம் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சட்டப் பேரவை மண்டபத்தில் கடந்த சில நாள்களாக தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. பேரவை மண்டபம் முழுவதையும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.