தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி ஆணையா்களுடனான ஆலோசனைக் கூட்டம், நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமையில், மாநகராட்சி தலைமையகத்தில் சனிக்கிழமை நடந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ள, மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளைப் பராமரிக்க புதிய இணைதள சேவையை அமைச்சா் கே.என்.நேரு தொடக்கி வைத்தாா். இதில், முதல்கட்டமாக திருச்சி மாநகராட்சியின் சொத்துகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மற்ற மாநகராட்சி, நகராட்சிகளின் சொத்து விவரம் ஒரு மாதத்துக்குள் பதிவேற்றம் செய்யப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.