மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவது குறித்து திமுக, மதிமுக இடையே திங்கள்கிழமை முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தைகுப் பிறகு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
"திமுக, மதிமுக இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். பேரவைத் தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடும்."