யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மானாமதுரை காவல் நிலைய வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்நிலையத்தில் நிபந்தனை  ஜாமினில் கையெழுத்து போட்டுவந்த இளைஞரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது. 

News image
கொலை செய்யப்பட்ட அக்னிராஜ்.
Updated On :5 மார்ச் 2021, 10:18 am

DIN


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்நிலையத்தில் நிபந்தனை  ஜாமினில் கையெழுத்து போட்டு வந்தவரை மர்மகும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பியோடியது. 

மானாமதுரையில் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி  இரவு நீதிமன்றம் முன்பு முருகன் மகன் மைனர் மணி என்ற அருண்நாதன் (27),  காட்டு உடைகுளத்தைச் சேர்ந்த கருப்புச்சாமி மகன் வினோத்கண்ணன் (30) ஆகிய இருவரையம் மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. 

இதில், அருண்நாதன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்தார். வினோத் கண்ணன் இன்று வரை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப் பதிந்து ஒன்பது பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் மானாமதுரையைச் சேர்ந்த தங்கமணி மகன் அக்னிராஜ் (19) ஒன்பதாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். ஜாமீனில் வெளிவந்தவர் தினசரி மானாமதுரை காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார். 

இன்று வெள்ளிக்கிழமை காலை கையெழுத்து போட்டு விட்டு இருசக்கர வாகனத்தில் வந்தவரை காவல்நிலையம் அருகில் மூன்று பேர் கொண்ட கும்பல் மறித்துக் கீழே தள்ளி சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது. மானாமதுரை போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். 

கடந்த ஜனவரியில் நடந்த கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

கொலை செய்யப்பட்டவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

கொலை நடந்த இடத்தில் மாவட்ட எஸ்பி ராஜராஜன், ஏடிஎஸ்பி முரளிதரன் (கடந்த ஜனவரி கொலை சம்பவத்தையும் இவர் விசாரித்தார்) நேரில் பார்வையிட்டு விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.