திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அஞ்சல் வாக்கு தொடர்பாக திமுக சார்பில் வழக்கு: நாளை விசாரணை

அஞ்சல் வாக்கு செலுத்துபவர்களின் பட்டியலை வழங்காமலேயே வாக்குப்பதிவு நடைபெறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :25 மார்ச் 2021, 11:05 am IST


சென்னை: அஞ்சல் வாக்கு செலுத்துபவர்களின் பட்டியலை வழங்காமலேயே வாக்குப்பதிவு நடைபெறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அஞ்சல் வாக்கு செலுத்துபவர்களின் பட்டியலை அரசியல் கட்சிகளிடம் மார்ச் 29-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், அஞ்சல் வாக்கு செலுத்துபவர்களின் பட்டியலை அரசியல் கட்சிகளிடம் வழங்காமலேயே, வாக்குப்பதிவு நடைபெறுவதாக திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்த நிலையில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.