யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 10 பேர் சாவு

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நள்ளிரவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 10 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :16 மே 2021, 8:39 am

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நள்ளிரவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 10 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து அதிகாலையில் ஆக்ஸிஜன் கொண்டு வரப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படடது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை மட்டும் 1551 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதேபோல், ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்தனர். இதில் 1752 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்த நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை மாலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வரையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 10 பேர் வரையில் உயிரிழந்தனர். இதில், இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 4 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலனின்றி உயிரிழந்தனர்.

 இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 3.30 மணிக்கு ஆக்ஸிஜன் கொண்டு வந்து பொறுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.