/

கருப்புப் பூஞ்சையால் தமிழகத்தில் 38 பேர் பாதிப்பு: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மறைக்கவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

News image

மா.சுப்பிரமணியன் (கோப்புப்படம்)

Updated On :25 மே 2021, 12:03 pm IST

கருப்பு பூஞ்சையால் தமிழகத்தில் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அடுத்துள்ள மேலக்கூட்டுடன்காடு பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கிராம மக்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது.

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து  தென் மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்று தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறேன். இதை தொடர்ந்து நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில்  உள்ள கிராமப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்‌.

மேலும் ஊரடங்கு காரணத்தால் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக குறைவாக காணப்படுகிறது என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கருப்புப் பூஞ்சை தொற்றால் தமிழகத்தில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு பயப்படத் தேவையில்லை என்றார். 

கருப்பு பூஞ்சை நோய் குறித்து கண்டறியும் மருத்துவ வல்லுநர்களுடன் இன்னும் இரண்டு நாள்களில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.