கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

News image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Updated On :3 நவம்பர் 2021, 3:06 am

DIN

 
ராணிப்பேட்டை: தொடர் கனமழை காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது தொற்று குறைந்து வருவதையடுத்து, பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, தமிழகத்தில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு நவ. 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தாா்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. காலை முதலே பரவலாக மழை பெய்துவந்த நிலையிலும், மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு உற்சாகமாக வருகை தந்தனா்.

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று புதன்கிழமை(நவ.3) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையைத் தொடர்ந்து வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.