கனமழை: 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை

புதுச்சேரி, காரைக்காலுக்கும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை: 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை

தமிழகத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் நாகை, மயிலாடுதுறை, மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோன்று புதுச்சேரி, காரைக்காலுக்கும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த மாவட்டங்களில் கன முதல் மிக கனமிக கனமழை வரை பெய்யும்  என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற எச்சரிக்கை:

தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஏழு மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com