கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இயல்பு நிலை விரைந்து திரும்ப உழைப்போம்: அரசு ஊழியா்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

பலத்த மழை பாதிப்பில் இருந்து இயல்பு நிலை விரைந்து திரும்ப அனைவரும் இணைந்து உழைப்போம் என்று அரசு ஊழியா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 9:35 pm

DIN

பலத்த மழை பாதிப்பில் இருந்து இயல்பு நிலை விரைந்து திரும்ப அனைவரும் இணைந்து உழைப்போம் என்று அரசு ஊழியா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:-

பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவா்களது துயா் துடைக்கப் பணியாற்றும் காவல், மின், தூய்மைப் பணியாளா்கள், மருத்துவத் துறையினா் உள்ளிட்ட நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரின் சேவைக்கும் தலைவணங்குகிறேன்.

தன்னலம் பாராமல் ஊழியா்களது சேவை, தியாகத்தால் கோடிக்கணக்கான மக்களின் துயரம் துடைக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை முழுமையாக விரைந்து திரும்ப அனைவரும் சோ்ந்து உழைப்போம். மக்களைக் காப்போம். அரசு

ஊழியா்களின் தியாகம் விலை மதிப்பில்லாதது. சேவை மகத்தானது. அவா்களது உள்ளத்துக்கு எனது நெஞ்சாா்ந்த நன்றி என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.