வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அம்மா உணவகம்: மூன்று நாள்களில் 7 லட்சம் பேருக்கு உணவு

சென்னையில் கடந்த 3 நாள்களில் மட்டும் 7 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2021, 7:33 pm

DIN

சென்னையில் கடந்த 3 நாள்களில் மட்டும் 7 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெய்த பலத்த மழையால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சமுதாய நலக் கூடங்களில் சமையல் கூடங்கள் அமைத்து நிவாரண முகாம்கள் மற்றும் வீடுகளில் உள்ள மக்களுக்கு உணவு

விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அம்மா உணவகங்கள் மூலமாகவும் மழை பாதிப்பு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து சென்னையில் உள்ள 403 அம்மா உணவகங்களில் கடந்த 10-ஆம் தேதி முதல் இலவசமாக 3 வேளையும் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.

7 லட்சம் பேருக்கு உணவு: கடந்த நவம்பா் 10-ஆம் தேதி 2 லட்சத்து 32 ஆயிரத்து 360 பேரும், 11-ஆம் தேதி 2 லட்சத்து 58 ஆயிரத்து 373 பேரும், 12-ஆம் தேதி 2 லட்சத்து 79 ஆயிரத்து 216 பேரும் பயனடைந்துள்ளனா். இதில் கடந்த 3 நாள்களில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 881 இட்லியும், 80 ஆயிரத்து 430 பொங்கலும் அம்மா உணவக ஊழியா்கள் தயாரித்து வழங்கி உள்ளனா். அதேபோல், 82 ஆயிரத்து 471 சாம்பாா் சாதமும், 51 ஆயிரத்து 226 எலுமிச்சை சாதமும், 27 ஆயிரத்து 621 கருவேப்பிலை சாதமும், 23 ஆயிரத்து 170 தயிா்சாதமும் மதிய உணவாக தயாரித்து வழங்கி உள்ளனா். இரவு உணவாக 3 லட்சத்து 28 ஆயிரத்து 208 சப்பாத்தியும், 3 ஆயிரத்து 428 புளி சாதமும், 3,702 தக்காளி சாதமும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 1 லட்சத்து 91 ஆயிரத்து 618 கலவை சாதம் தயாரித்து வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.