கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கார்த்திகை மாதம் பிறப்பு: மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணி விழா 

ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் புதன்கிழமை பிறந்ததை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

News image

மானாமதுரை அண்ணாசிலை அருகேயுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு கணபதிஹோம் நடத்தி மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

Updated On :17 நவம்பர் 2021, 5:35 am

DIN

மானமதுரை: ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் புதன்கிழமை பிறந்ததை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். 

கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே ஊரெங்கும் ஐயப்பனின் சரண கோஷம் கேட்கத் தொடங்கிவிடும். இந்த சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதம் புதன்கிழமை பிறந்ததையொட்டி மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் சபரிமலை செல்ல மண்டல விரதம் தொடங்கும் ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் கூறி விரத மாலை அணிந்து கொண்டனர். 

மானாமதுரை அண்ணாசிலை அருகேயுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு புனிதநீர் கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. அதன்பின் கலச நீராலும் அபிஷேகப் பொருள்களாலும் ஐயப்பனுக்கும் பதினெட்டாம் படிக்கும்  அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சுவாமி ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 

ஐயனுக்கும் கோயில் காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. இருமுடி தாங்கி சபரிமலை செல்ல உள்ள ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்கு வந்து தர்ம சாஸ்தாவுக்கு தேங்காய் பழத்துடன் பூஜைகள் நடத்தி குருசாமிகளின் கையால் சரணகோஷம் கூறி விரத மாலை அணிந்து கொண்டனர். 

மானாமதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலிலும் ஐயப்ப பக்தர்கள் பூஜைகள் நடத்தி விரத மாலை அணந்து விரதம் தொடங்கினர். 

மேலும் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களிலும் விநாயகர் கோயில்களிலும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். 

இதையும் படிக்க கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்: காவல்துறை வேண்டுகோள்

திருப்புவனம், இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள்  தங்களது பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களிலும் பிற கோயில்களுக்கும் சென்று பூஜை நடத்தி வழிபாடு செய்து விரத மாலை அணிந்தனர். 

இளையான்குடி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் விரத மாலை அணிந்து விரதம் தொடங்கினர். 

மானாமதுரை ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் முதல் தேதியிலிருந்து தை மாதம் ஒன்றாம் தேதி வரை தினமும் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்படும். 

மேலும் மண்டல காலம் முடியும் வரை கோயிலில்  ஐயப்பனுக்கு உகந்த புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு ஐயப்ப பக்தர்கள் கூடி பஜனைகள் நடத்தி கோயிலில் அன்னதானம் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.