ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேராவூரணி அருகே சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

பேராவூரணி அருகே வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

News image

கோப்புப்படம்

Updated On :25 நவம்பர் 2021, 5:12 am

DIN

பேராவூரணி: பேராவூரணி அருகே வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பூங்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வைத்தி மனைவி சிவபாக்கியம்(85) மண்சுவரால் கட்டப்பட்ட கூரைவீட்டில் தனியாக வசித்து வந்தார். 

பேராவூரணி பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையால் புதன்கிழமை இரவு வலுவிழந்த மண்சுவர் சரிந்து விழுந்ததில் காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்த சட்டப்பேரவை உறுப்பினர் என். அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், வட்டாட்சியர் சுகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். 

இது குறித்து பேராவூரணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.