இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுறை அறிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2021, 4:16 pm

DIN

கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுறை அறிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளிலிருந்து 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

மாங்காடு ஊராட்சி ஆலவிளை, நெடும்பறம்பு, பிலாந்தோட்டம், வாவறை ஊராட்சியில் பணமுகம், கோயிக்கத்தோப்பு, இஞ்சிபறம்பு, வடுவூர்தோட்டம், மாமுகம், பள்ளிக்கல், புதுச்சை, நெடும்பறம்பு, முஞ்சிறை ஊராட்சி பார்த்திபபுரம், பிளாக் ஆபீஸ் சுற்றுவட்டார பகுதிகள், ஏழுதேசம் பேரூராட்சி ஏலூர்முக்கு, வைக்கல்லூர், பருத்திக்கடவு,  மரப்பாலம், நடவரம்புகரி பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இப்பகுதி மக்கள் மங்காடு அரசு நடுநிலைப் பள்ளி, பள்ளிக்கல் அரசு நடுநிலைப் பள்ளி, ஏழுதேசப்பற்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நித்திரவிளையில் இருந்து மங்காடு வழி களியக்காவிளை செல்லும் சாலை, நித்திரவிளை - புதுக்கடை சாலை, மங்காடு - அதங்கோடு - குழித்துறை, மாங்காடு - வாவறை சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் இச்சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.