மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் செப். 3-6 வரை அனுமதியில்லை

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுர் அங்காளம்மன் கோயிலில் செப்டம்பர் 3 முதல் 6-ஆம் தேதி வரை பக்தர்கள் வழிபட அனுமதியில்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் செப். 3-6 வரை அனுமதியில்லை
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் செப். 3-6 வரை அனுமதியில்லை

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுர் அங்காளம்மன் கோயிலில் செப்டம்பர் 3 முதல் 6-ஆம் தேதி வரை பக்தர்கள் வழிபட அனுமதியில்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மேலும், கரோனா பரவல் காரணமாக செப்டம்பர் 6-ஆம் தேதி அமாவாசையன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவமும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் வார இறுதி நாள்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களுக்கு அனுமதியில்லை என்று ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அமாவாசையையொட்டி அதிக அளவில் பக்தர்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் மேல்மலையனுர் அங்காளம்மன் கோயிலில் செப்டம்பர் 3 முதல் 6-ஆம் தேதி வரை பக்தர்கள் வழிபட அனுமதியில்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com