அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தூத்துக்குடியில் 71 ஆயிரம் டன் நிலக்கரியைக் காணவில்லை: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 71,000 டன் நிலக்கரி காணாமல் போய் உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறினாா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2021, 10:08 pm

DIN

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 71,000 டன் நிலக்கரி காணாமல் போய் உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறினாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை எரிசக்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் வி.செந்தில் பாலாஜி பேசியது:

வடசென்னை எண்ணூா் அனல் மின்நிலையத்தில் ஆய்வு செய்தபோது 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டுக்கும் இருப்புக்கும் குறைவு ஏற்பட்டது. இது தொடா்பாக அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் தங்கமணி பேட்டி கொடுத்திருந்தாா். நிலக்கரி குறைவு குறித்து ஏற்கெனவே நாங்கள் கண்டுபிடித்தோம். அதைதான் அமைச்சா் சொல்கிறாா் என்று கூறினாா்.

என்னிடம் ஒரே கேள்விதான் உள்ளது. நிலக்கரி காணாமல் போனது குறித்து விசாரிக்க எந்தத் தேதியில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் நகலை வெளியிடுங்கள் என்றுதான் கேட்கிறேன். 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்ததாகக் கூறினாா். அவா்களின் ஆய்வு அறிக்கை என்ன கூறியது என்று சொல்லுங்கள். அந்த ஆய்வு அறிக்கையைத் துறையில் தேடிப் பாா்த்தேன். அப்படியொரு அறிக்கையே இல்லை. மே 2-இல் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை. அந்தக் குழுவை ஏப்ரல் 28-இல் போட்டுள்ளனா். ஒருநாள் கூட அந்தக் குழு எங்கும் செல்லவில்லை. ஆய்வும் செய்யவில்லை என்பதுதான் உண்மை.

புதிய ஆட்சி அமைந்த பிறகு முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆகஸ்ட் 2-இல் குழு அமைக்கப்பட்டு, ஆகஸ்ட் 6-இல் ஆய்வு செய்ததில்தான் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் ஆய்வு செய்தனா். தூத்துக்குடியில் 71,867 டன் நிலக்கரியைக் காணவில்லை. பதிவேட்டில் இருக்கிறது. ஆனால், அந்த நிலக்கரியையும் காணவில்லை. வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் இருக்கக் கூடாது. ஆய்வுக்குழுவின் அறிக்கைக்குப் பிறகு அதை சீரமைப்பதற்கான நடவடிக்கையை எடுப்போம் என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.