தாம்பரம், ஆவடியில் புதிய காவல் ஆணையரகம்: முதல்வர் ஸ்டாலின்
தாம்பரம், ஆவடியை தலைமையிடமாக கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.


தாம்பரம், ஆவடியை தலைமையிடமாக கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகின்றது. இன்றைய கூட்டத்தில் காவல்துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
அப்போது, “தாம்பரம், ஆவடியை தலைமையிடமாக கொண்டு தனித்தனி புதிய காவல் ஆணையாளர் அலுவலகங்கள் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தற்போது தாம்பரம், ஆவடி ஆகிய இரண்டு பகுதிகளும் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.
முன்னதாக, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட நகராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...