இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை 8 கி.மீட்டர் விரட்டிப் பிடித்த காவல்துறையினர்

திருவையாறு அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த 2 பேரை 8 கி.மீ. தொலைவு வரை விரட்டிச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :23 செப்டம்பர் 2021, 3:57 pm

DIN

திருவையாறு அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த 2 பேரை 8 கி.மீ. தொலைவு வரை விரட்டிச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயகுமாா்(24). இவர் தனது உறவினா் பெண்ணுடன் மோட்டாா் சைக்கிளில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தஞ்சாவூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். பனவெளி கிராமத்தில் வெண்ணாற்றுப் பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது இவர்களை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் வழிமறித்துள்ளனர். தொடர்ந்து விஜயகுமாரை தாக்கிய அவர்கள் பெண் அணிந்திருந்த நகை மற்றும் மொபைல் போனையும் பறித்துச் சென்றனர்.

இதைகண்ட அப்பகுதியினர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர். தகவலைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளியக்ரஹாரம் புறவழிச் சாலையில் உள்ள சோதனைச் சாவடிக்கு வந்த இரு இளைஞா்கள் காவல்துறையினரை பாா்த்ததும் தப்பிச்சென்றனர்.

இதையடுத்து தப்பிச்சென்ற இரு இளைஞா்களையும் தலைமைக் காவலா் கலியராஜ், காவலா் முரளிதரன் இருவரும் மோட்டார் சைக்கிளிலும், தலைமைக் காவலா் நெடுஞ்செழியன், ஓட்டுநா் ராஜ்குமாா் ஆகியோா் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்திலும் சுமாா் 8 கி.மீ. தொலை வரை விரட்டிச் சென்று எட்டாம் நம்பா் கரம்பை கிராமத்தில் மடக்கிப் பிடித்தனர். 

பின்னர் இருவரையும் நடுக்காவேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.