சென்னை: தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதனின் தாய் மீனாட்சி கிருஷ்ணன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தினமணி நாளிதழ் ஆசிரியர் கி.வைத்தியநாதனின் தாய் மீனாட்சி கிருஷ்ணன் இன்று (14.04.2021) காலை உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
மீனாட்சி கிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் தினமணி நாளிதழ் ஆசிரியர் கி.வைத்தியநாதன் மற்றும் அவருடைய குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.